போலீசாருக்கு பறந்த உத்தரவு | சென்னை காவல் ஆணையர் அதிரடி

x

சென்னையில் பிரதான சாலைகளில் உள்ள சிக்னல்களில் ஒலிபெருக்கிகள் மூலம் பாடல்கள் அறிவிப்புகள் வெளியிடுவதை நிறுத்துமாறு காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். சிக்னலில் காத்திருக்கும் மக்களுக்கு ஏதுவாக சற்று இளைப்பாற ஸ்பீக்கர்கள் வைக்கப்பட்டு, திரைப்பட பாடல்களின் இசைகள் மட்டும் ஒலிக்கப்பட்டு வந்தன. மேலும் சீட் பெல்ட், ஹெல்மெட் அணியாதவர்கள் குறித்து போலீசார் எச்சரிக்கைகளை விடுத்தும் விழிப்புணர்வர்களை ஏற்படுத்தி வந்தனர். இந்நிலையில், ஒலி மாசு ஏற்படுவதால், ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிப்புகள் மற்றும் பாடல்களை ஒளிபரப்ப வேண்டாம் என காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்