திடீரென தீக்குளிக்க முயன்ற ஓபிஎஸ் ஆதரவு கவுன்சிலர்? -கூட்டத்தில் பரபரப்பு

x

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் தனது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்று கூறி ஓபிஎஸ் ஆதரவாளர் என்று கூறப்படும் அன்பரசு என்ற கவுன்சிலர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக 16 கோரிக்கை மனுக்களை வழங்கியதாகவும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறி அன்பரசு கமுதி ஊராட்சி ஒன்றிய தலைவரிடம் புகார் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அன்பரசு

தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அருகில் இருந்த கவுன்சிலர்கள் அன்பரசை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர் ஆம்பலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்