ஓ.பி.எஸ், டிடிவி ஆர்ப்பாட்டம் - வெளியான அறிவிப்பு | OPS | TTV | ThanthiTV

x

கொடநாடு வழக்கை மெத்தனபோக்கோடு நடத்தும் தமிழக அரசை கண்டித்து ஓ.பி.எஸ் அணி நடத்தும் ஆர்பாட்டத்தில் ஓ.பி.எஸ் உடன் டிடிவி தினகரனும் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அமமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், கொடநாடு கொலை வழக்கில் மெத்தனப் போக்கோடு செயல்படும் தி.மு.க அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வரும் 1-ம் தேதி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக கூறியுள்ளனர். இதில் அமமுக பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனியில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்துடன், டிடிவி தினகரனும் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்