பேரவைக்கு பவுன்சர்களோடு வந்த ஓபிஎஸ்; உண்மை என்ன? - வைத்திலிங்கம் பளீச் பதில்

x

சட்டப்பேரவைக்கு பவுன்சர்களோடு வந்த ஓ. பன்னீர்செல்வம், அதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, பவுன்சர்களோடு வரவில்லை என மறுத்தார். இன்று சட்டப்பேரவைக்கு ஓ பன்னீர்செல்வம் வருகை தந்த போது, அவரோடு, கருப்பு உடையணிந்த 3 தனியார் பவுன்சர்களும் உடன் வந்தனர். தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்துடன் சென்ற அவர்களை, சட்டப்பேரவை நுழைவு வாயிலில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.பின்னர் இதுதொடர்பாக ஓ பன்னீர்செல்வத்திடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, தங்களோடு பவுன்சர்கள் யாரும் வரவில்லை என்றார். உடனிருந்த வைத்திலிங்கமும் அது தவறான தகவல் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்