மோடி ஆட்சிக்கு தேதி குறித்த எதிர்க்கட்சிகள்..பீகாரில் Meet Up..ஒன்று சேரும் பெரிய தலைகள்

x

பீகாரில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்க உள்ளதாக, அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க பீகார் முதல்வர் நிதிஷ் குமார் முயன்று வரும் நிலையில், ஜூன் 12 ஆம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆர்ஜேடி, ஆம் ஆத்மி, உத்தவ் தாக்கரே ஆதரவு சிவசேனா உள்ளிட்ட பல கட்சிகள் பங்கேற்கின்றன. இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியும் பங்கேற்க உள்ளதை, அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் உறுதி செய்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்