மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைதிறப்பு... பிப்ரவரி 17ம் தேதி வரை சிறப்பு பூஜைகள்

x

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாசி மாத பூஜைகளுக்காக நடை இன்று திறக்கப்பட்டுள்ளது.

அங்கு, மகரவிளக்கு கால பூஜைகளுக்குப்பின், கடந்த மாதம் 20ம் தேதி கோயில் நடை அடைக்கப்பட்டது.

இந்நிலையில், மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது.

இதனிடையே, நாளை முதல் வரும்17ஆம் தேதி வரை, 5 நாட்களிலும் தினமும் நெய்யபிஷேகம், கலசாபிஷேகம், படிபூஜை உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்