4 தவணைகள் மட்டுமே பாக்கி.. பைனான்சியர்ஸ் முன் துடி துடிக்க பிரிந்த... - தடுக்காமல் வேடிக்கை பார்த்த வங்கி உழியர்கள்

x

தனியார் நிதி நிறுவன ஊழியர்களின் நெருக்கடியால் துப்பரவு பணியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் நரசியர்குளம் பகுதியை சேர்ந்த ஜெயவேல், தனியார் ஸ்கேன் சென்டரில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். மனைவி குழந்தைகளுடன் வசித்து வரும் இவர், தருமபுரியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் 80 ஆயிரம் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. வட்டியுடன் 20 தவணைகளை கட்டி முடித்த நிலையில், 4 தவணைகள் மட்டுமே பாக்கி இருந்துள்ளன. மீதமுள்ள 4 தவணைகளை கட்ட தாமததமானதால் நிதி நிறுவன ஊழியர்கள் வீட்டிற்கு வந்து, தவணை செலுத்த வலியுறுத்தி உள்ளனர். சம்பவத்தன்று, ஊர் மக்கள் முன்னிலையில் ஜெயவேலை, உழியர்கள் தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படும் நிலையில், மன உளைச்சலுக்கு ஆளான ஜெயவேல் வீட்டிற்குள் சென்று தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இதை அறிந்திராத நிறுவன ஊழியர்கள், வெளியே நின்று சத்தம் போட்டு கொண்டிருந்த நிலையில், ஜெயவேல் பரிதாபமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனால், கொதித்து போன ஊர்மக்கள் நிறுவன ஊழியர்களை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்த நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்