தொடரும் ஆன்லைன் ரம்மி விபரீதம்... அதிக பணத்தை இழந்ததால் இளைஞர் தற்கொலை

x

தொடரும் ஆன்லைன் ரம்மி விபரீதம்... அதிக பணத்தை இழந்ததால் இளைஞர் தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே ஸ்ரீவைகுண்ட பெருமாள்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபதிராஜா. இவர் தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி தடை செய்யப்படுவதற்கு முன் இந்த விளையாட்டினால் அதிகளவில் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட பூபதிராஜாவை அவருடைய தந்தை கண்டித்த நிலையில், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்