ஆன்லைன் சூதாட்டம்.."எங்கள் கையில் இல்லை" - கைவிரித்த மத்திய அரசு

x

ஆன்லைன் பந்தயம் மற்றும் சூதாட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பணத்தின் அளவு குறித்து தங்களிடம் கணக்கு எதுவும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அளித்துள்ள பதிலில், ஆன்லைன் பந்தயம் மற்றும் சூதாட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பணத்தின் அளவு குறித்து எந்தவொரு கணக்கணெடுப்பும் நடத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் பந்தயம் மற்றும் சூதாட்ட பயன்பாடுகளை சட்டப்பூர்வமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சைபர் குற்றங்கள் மற்றும் கிரிப்டோ சொத்துக்கள் தொடர்பான மோசடிகளை அமலாக்கத்துறை விசாரித்து வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில், கடந்த 16-ஆம் தேதி நிலவரப்படி, 212 கோடியே 91 லட்சம் ரூபாய் முடக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்