மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு ..நெல்லையில் அதிர்ச்சி

x

திருநெல்வேலியில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு சென்றிருந்த இளம் வயது அர்ச்சகர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 18 வயது பாலசுப்பிரமணியம் நேற்று இரவு ஆலங்குளம் அருகே உள்ள மாறாந்தையில் பாப்பாத்தி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா பூஜைக்காக சக அர்ச்சகர்களுடன் சேர்ந்து சென்றுள்ளார். இந்நிலையில், இன்று கோயில் அருகே உள்ள தெரிந்தவர் வீட்டில் உணவருந்த சென்ற போது, அங்கு இருந்த மின்விசிறி சுவிட்சை ஆன் செய்த போது மின்சாரம் தாக்கி பாலசுப்பிரமணியம் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தால் கோயில் திருவிழா வெறிச்சோடி காணப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்