சென்னையில் ஒரு நாள் இரவு.. தி.மலையில் மறு நாள் இரவு.. தமிழகத்தை உலுக்கிய 2 சம்பவம் - ஷாக்கில் போலீஸ்

x

சென்னை மற்றும் திருவண்ணாமலை கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது ஒரே கும்பலா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

சென்னை பெரம்பூர் நகைக்கடையில், அண்மையில் ஷட்டரில் வெல்டிங்கால் துளையிட்டு 9 கிலோ தங்கம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பரபரப்பு அடங்குவதற்குள் திருவண்ணாமலையில் நான்கு ஏடிஎம்களில் கொள்ளையர்கள் கைவரிசையை காட்டினர்.

அடுத்தடுத்து நடந்த இரண்டு கொள்ளைச் சம்பவங்களுக்கும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இருப்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.

ஆறு பேர் பயணிக்கும் காரை பயன்படுத்தியது, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தை நோட்டமிட்டு கொள்ளையடித்தது, கியாஸ் வெல்டிங் பயன்படுத்தியது காவலாளி இல்லாத இடங்களில் கொள்ளையை அரங்கேற்றிவிட்டு ஆந்திராவிற்கு தப்பியது என இரண்டு சம்பவங்களும் ஒத்துப்போவது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

ஒரே கும்பல் திட்டமிட்டு இரண்டு கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றியதா என்ற கோணத்தில் ஆந்திர போலீஸார் உதவியுடன், தமிழக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அதே நேரத்தில் அந்த கொள்ளை கும்பல் தமிழ்நாட்டிற்குள் பதுங்கியிருக்கலாம் என்பதால் வாகன தணிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்