ECR சாலையுடன் இணையும் OMR.. சென்னை டிராபிக்குக்கு முற்றுப்புள்ளி - இனி 15 நிமிடத்தில் செல்லலாம்..!

x

சென்னையில் ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலையை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் அமைக்க சிஎம்டிஏ முடிவு செய்துள்ளது

சென்னை கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை ஆகிய சாலைகளை இணைத்து போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு ஒரு புதிய திட்டத்தினை சிஎம்டிஏ ஒரு திட்டம் தயாரித்துள்ளது. 1000 கோடி ரூபாய் செலவில் உருவாக உள்ள இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் ஓஎம்ஆர், ஈசிஆரில் தற்போது உள்ள ஒரு மணி நேர பயணம் வெறும் 15 நிமிடத்தில் சாத்தியமாகும் என கூறப்படுகிறது. இதற்காக இசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலைகளை உயர்மட்ட சாலையுடன் இணைப்பது குறித்து விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட உள்ளது. இசிஆர் சாலையில் திருவான்மியூரையும் ஓஎம்ஆர் சாலையில் துரைப்பாக்கத்தையும் இணைக்கும் வகையில் விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்யப்பட உள்ளதாகவும் இதற்காக 2 கோடியே 30 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தயாரிக்கப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்