"கால்லலாம் விழாதீங்க" - CM ஸ்டாலினை கோபப்படுத்திய முதியவர்.. பரபரப்பு காட்சிகள்

x

திருவாரூரில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். சன்னதி தெருவில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் கோட்டம் திறப்பு விழாவிற்காக காட்டூர் சென்றபோது, வீட்டு வாசலில் நின்ற மக்களிடம் மனுக்களைப் பெற்றுக்கொண்டார். அப்போது, முதியவர் ஒருவர் மனுவை கொடுத்துவிட்டு முதலமைச்சரின் காலில் விழுந்தார். தொடர்ந்து, காலில் விழுந்தால் தனக்குப் பிடிக்காது எனக் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காலில் விழுந்தால் மனுவை திரும்பக் கொடுத்துவிடுவேன் என அறிவுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்