பாழடைந்த கட்டடத்தில் மூதாட்டி தங்க வைப்பு - அதிகாரிகளை கடிந்து கொண்ட கலெக்டர்

x

ஆரணி அருகே பாழடைந்த அரசு கட்டடத்தில் மூதாட்டியை தங்க வைத்த அரசு அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர் கடிந்து கொண்டார். திருவண்ணாமலை மாவட்டம், மருசூர் கிராமத்தில் 80 வயது மதிக்கதக்க முனியம்மாள் என்ற மூதாட்டி தங்க இடம் இன்றி தவித்து வந்தார். அவரை ஊராட்சி மன்ற தலைவர் சதிஷ்குமார், துணை தலைவர் ரமேஷ் ஆகியோர் அரசுக்கு சொந்தமான பழைய வானொலி தொலைக்காட்சி அறையில் தங்க வைத்தனர். இதைக் கண்ட மாவட்ட ஆட்சியர் முருகேஷ், பாதுகாப்பின்றி மூதாட்டி தங்க வைத்திருப்பதற்காக அவர்களைக் கடிந்து கொண்டார். பின்னர், மூதாடியை முதியோர் இல்லத்தில் சேர்க்க அறிவுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்