ஆழ்துளை கிணறுகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள் | Thoothukudi

x

தூத்துக்குடியில், அனுமதியின்றி செயல்பட்ட ஆழ்துளை கிணறுகளுக்கு நீர்வளத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். முள்ளக்காடு, கோரம்பள்ளம் பகுதிகளில் அனுமதியின்றி நிலத்தடி நீர் எடுத்து விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட நிலையில், அனுமதியின்றி நிலத்தடி நீர் எடுத்தது உறுதியானது. இதனைத் தொடர்ந்து நிலநீர் தடுப்பு கண்காணிப்பு குழுவிற்கு அளிக்கப்பட்ட பரிந்துரையின் பேரில் சம்பந்தப்பட்ட 6 ஆழ்துளை கிணறுகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்