இரவில் பெண் கவுன்சிலர்களை அலுவலகத்தில் வைத்து பூட்டிச் சென்ற அதிகாரிகள் - குமரியில் அதிர்ச்சி

x

குமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களை, அலுவலகத்திலேயே விட்டு அதிகாரிகள் பூட்டிச் சென்றனர். மார்த்தாண்டம் ரயில் நிலையம் அருகே நட்டாலம் பேரூராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதனை வேறு இடத்திற்கு மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது. பொதுமக்களுக்கு வசதியான இடத்தில் அலுவலகம் அமைந்திருப்பதால், அதனை இடமாற்றம் செய்யக் கூடாதென வலியுறுத்தி, நான்கு பெண் கவுன்சிலர்கள் உள்பட 11 பேர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், வேலை நேரம் முடிவடைந்ததால் அவர்களை அலுவலகத்தில் உள்ளே வைத்து அதிகாரிகள் பூட்டிச் சென்றனர். இதனால், இரவிலும் போராட்டம் தொடர்ந்தது.


Next Story

மேலும் செய்திகள்