ஆய்வு செய்ய வந்த அதிகாரிகள்... மருத்துவர்களை போட்டு கொடுத்த பெண் - அரசு மருத்துவமனையில் பரபரப்பு

x

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த தமிழ்நாடு சட்ட பேரவை பொதுக் கணக்கு குழுவிடம், பெண் ஒருவர் சரமாரியாக புகார் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பொள்ளாச்சியிலுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், சட்டப்பேரவை பொது கணக்கு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள் மருத்துவர்களிடம், மருத்துவமனை வசதிகள் குறித்தும், நோயாளிகள் வருகை குறித்தும் கேட்டறிந்தனர். அப்போது அங்கிருந்த பெண் ஒருவர், மருத்துவர்கள் சரியான நேரத்திற்கு வருவது இல்லை எனவும், நோயாளிகளுக்கு முறையாக மருத்துவ பரிசோதனை செய்வதில்லை எனவும் புகார் தெரிவித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்