ஆபாசம் கண்களில்...பேரணியில் குத்தாட்டம் போட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய LGBTQ சமூகத்தினர்

x

கோவையில் நடைபெற்ற வானவில் சுயமரியாதை பேரணியில், தன்பாலின ஈர்ப்பாளர்கள், மாற்றுப் பாலினத்தவர்கள் பங்கேற்றனர். எல்.ஜி.பி.டி சமூகத்தினருக்கான மூன்றாம் ஆண்டு சுயமரியாதை பேரணி, பந்தய சாலையில் நடைபெற்றது. இதில், தன்பாலின ஈர்ப்பாளர்கள், மாற்றுப் பாலினத்தவர்கள் உள்பட ஏராளமானோர் "எங்கள் பாலினம் எங்கள் உரிமை" என்ற பதாகைகளுடன் மேள, தாளம் முழங்க ஊர்வலம் வந்தனர். மேலும், எல்.ஜி.பி.டி சமூகத்தின் கொடி, பலூன்களை பறக்கவிட்டவாறு, பறை இசையுடன் நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்