"இனி டிஜிபியிடமே நேரில்..." - வெளியான முக்கிய அறிவிப்பு

x

பொதுமக்களும், காவலர்களும் நேரில் சந்தித்து மனுக்களை அளிக்கலாம் என்று காவல் துறை டிஜிபி சங்கர் ஜிவால் அறிவித்துள்ளார்.


பொதுமக்கள் மற்றும் காவலர்கள் தங்கள் குறைகளை தீர்க்கும் வகையில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 11:30 மணியளவில் தன்னை நேரில் சந்தித்து மனு அளிக்கலாம் என்று அவர் கூறியுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு தலைமை காவல் இயக்குனர் அலுவலகம் சார்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திங்கள் முதல் வெள்ளி வரை, அரசு விடுமுறை நாட்களைத் தவிர, தினமும் காலை 11:30 மணிக்கு பார்வையாளர்கள் அறையில் நேரில் சந்தித்து டிஜிபி மனுக்களை பெறுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, காவலர்களும், பொதுமக்களும் மனு அளித்து பயன்பெற்றுக் கொள்ளலாம் என்றும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்