வட மாநில இளைஞரை தாக்கி கொலை.. 7 சிறுவர்கள் உட்பட 9 பேர் கைது

x

சென்னையில், வட மாநில இளைஞரை கொலை செய்த வழக்கில், ஏழு சிறுவர்கள் உட்பட, ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்...

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளியான ரமேஷ் மண்டல், கடந்த 27ம் தேதி வேளச்சேரி அருகே நடந்து சென்றபோது, எதிரே வந்த சிறுவர்கள் மீது இடித்ததாக தெரிகிறது.

இது தொடர்பாக தகராறு ஏற்பட்ட நிலையில், ரமேஷ் மண்டலை சிறுவர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த ரமேஷ் மண்டல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஹரிஹரன், கோகுல் என்ற இளைஞர்களையும், 7 சிறுவர்களையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்