சென்னையில் இனி வாகனம் திருட்டே நடக்காது..!! 50 இடங்களில் அதிநவீன 200 ஏஎன்பிஆர் கேமரா

x

சென்னையில் திருட்டு வாகனங்களை கண்டுபிடிக்க 50 இடங்களில் அதிநவீன 200 ஏஎன்பிஆர் கேமரா பொருத்த காவல்துறை முடிவு செய்துள்ளது.

சென்னையில் நடைபெறும் பெரும்பாலான குற்ற சம்பவங்களுக்கு திருட்டு வாகனங்களையே குற்றவாளிகள் அதிகம் பயன்படுத்துவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் வாகனங்கள் திருட்டை தடுக்கவும் திருடப்பட்ட வாகனங்களை உடனடியாக கண்டுபிடிக்கவும் சென்னை காவல்துறை TROZ எனப்படும் புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது. அதன் படி 200 அதிநவீன ஏ என் பி ஆர் கேமராவை சென்னை முழுவதும் 50 இடங்களில் பொருத்துவதற்கு காவல்துறை முடிவு செய்துள்ளது

இந்த ஏ என் பி ஆர் கேமராக்கள் திருட்டு வாகனங்களை கண்டுபிடித்து அது செல்லும் பாதையை பதிவு செய்து காவல்துறையினருக்கு எச்சரிக்கும் விதமாக தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கேமராவில் சிக்கிய திருட்டு வாகனம் குறித்து அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கும் வாட்சப் குறுஞ்செய்தி மூலம்தகவல் தெரிவிக்கப்பட்டு,மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்