“சாட்சியாக இருந்த கணவனும் இல்லை“... நிலத்தை கிரையம் முடித்து தர மறுப்பு - இரண்டு குழந்தைகளோடு தவிக்கும் தாய்

x

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கணவன் வாங்கிய நிலத்தை, அவரது இறப்புக்கு பின்னால் கிரையம் முடித்து தர மறுப்பதாக மனைவி புகாரளித்திருக்கிறார்.

போச்சம்பள்ளி அடுத்த மூக்காகவுண்டனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜலிங்கம்.

இவருக்கு அகிலா என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், ராஜலிங்கம் போச்சம்பள்ளியில் தொழில் தொடங்க 7 சென்ட்டில் வீட்டு மனைப்பட்டா வாங்கியுள்ளார்.

இதனிடையே, கடந்த 2021 ஆம் ஆண்டு ராஜலிங்கம் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், நிலத்தை கிரையம் செய்து கொடுக்க ரகு என்பவரிடம் சுமார் 35 லட்சம் வரை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கணவனின் இறப்புக்கு பின்னால் நிலத்தை கிரையம் செய்து கொடுக்கமால் அழைக்கழித்து வருவதாக ராஜலிங்கத்தின் மனைவி போலிசில் புகாரளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்