"டெல்லியில் ஊழலை ஒழித்து விட்டோம்" | டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

x

ஊழலை ஒழிக்க உதயமான கட்சி ஆம் ஆத்மி என்று அக்கட்சியின் நிறுவனரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.


இமாச்சல பிரதேசத்தில் குல்லூ என்ற இடத்தில் நடந்த பேரணியில் பேசிய அவர், தங்களுக்கு அரசியல் தெரியாது என்றும், நாட்டில் ஊழலை ஒழிக்க கட்சி தொடங்கியதாகவும் கூறினார். முதலில் டெல்லியில் ஊழலை ஒழித்து விட்டதாகவும், அது பஞ்சாப்பிலும் தொடரும் என்றும் தெரிவித்தார். நாட்டில் எந்த முதலமைச்சராவது, தமது அமைச்சரவையில் குற்றச்சாட்டுக்குள்ளான அமைச்சரை சிறைக்கு அனுப்பி இருக்கிறார்களா என கேள்வி எழுப்பினார். ஆனால் பஞ்சாப்பில், ஆம் ஆத்மி முதலமைச்சர் பகவந்த மான், தனது அமைச்சரவையில் குற்றச்சாட்டுக்குள்ளானவரை சிறைக்கு அனுப்பியதாக கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்