நோ CCTV..நோ செக்யூரிட்டி..வெறுங்கையுடன் வீடு திரும்பிய திருடர்ஸ்..திருப்பத்தூர் அருகே பரபரப்பு

x

திருப்பத்தூர் அருகே, ஏ.டி.எம்.மை உடைத்து கொள்ளையடிக்க முயன்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலையில், தனியார் ஏ.டி.எம் மையம் உள்ளது. இங்கு நேற்றிரவு மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்றனர். ஏ.டி.எம்.-ஐ உடைக்க முடியாததால் அப்படியே விட்டுவிட்டுச் சென்றனர். ஏ.டி.எம்.மில் காவலாளியோ, சி.சி.டி.வி கேமராவோ பொருத்தப்படாத நிலையில், கைரேகை நிபுணர்களை வரவழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்