மீண்டும் காகிதமில்லா பட்ஜெட் - அல்வா கொடுத்த நிதியமைச்சர்

x

2023-24-ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தயாரிப்பு பணி இறுதிக்கட்டத்தை எட்டியதை அடுத்து, நிதியமைச்சத்தில் அல்வா தயாரிப்பு நிகழ்வு நடைபெற்றது.

வரும் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிப்ரவரி ஒன்றாம் தேதி, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார்.

பட்ஜெட் உரை தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியதை குறிக்கும் வகையில், பாரம்பரிய வழக்கப்படி, நிதியமைச்சக அலுவலகத்தில் ஹல்வா தயாரிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, நிதித்துறை செயலாளர் டி.வி. சோமநாதன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர், பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு அல்வா வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் காகிதம் இல்லா பட்ஜெட்டாக, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்