திடீரென வீடுகளுக்குள் புகுந்து பெண்களை தாக்க முயன்ற வடமாநிலத்தவர்.. கட்டி போட்டு பொளந்த பொதுமக்கள்

x
  • குன்னூர் அருகே வீடுகளுக்குள் புகுந்து பெண்களை தாக்க முயன்ற வட மாநிலத்தவரை, பொதுமக்கள் தாக்கி கட்டி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
  • நீலகிரி மாவட்டம் குன்னுர் அருகே, காட்டேரி பகுதியில் பீகாரை சேர்ந்த அசோக்புல்லா என்பவர், வீடுகளுக்குள் புகுந்து பெண்களை தாக்க முயன்றுள்ளார்.
  • அவ்வழியாக செல்லும் வாகனங்கள் மீது கற்களை எரிந்து தாக்கியுள்ளார்.
  • இதனால் அப்பகுதி மக்கள் அசோக்புல்லாவை தாக்கி கட்டி வைத்துள்ளனர்.
  • இதன்பின்னர் அசோக்புல்லாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா என விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

மேலும் செய்திகள்