பள்ளி நுழைவு வாயில் சுவரை உடைத்து தரைமட்டமாக்கிய யானைகள்

x

நீலகிரி மாவட்டம் குன்னூரில், காட்டு யானைகள் பள்ளி நுழைவு வாயில் சுவரை சேதப்படுத்தி உள்ளது.

குன்னூரில் கடந்த ஒரு மாதமாக முகாமிட்டுள்ள 9 காட்டு யானைகள் தேயிலை தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு பகுதியில் உலா வருகின்றன.

யானைகளை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இரவில் குடியிருப்பு பகுதியில் நுழைந்த யானைகள், ஆரம்ப பள்ளி நுழைவு வாயில் சுவரை உடைத்து சேதப்படுத்தியுள்ளது.

நியாய விலை கடையையும் யானைகள் சேதப்படுத்தியுள்ள நிலையில், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்