நண்பர்களை சந்திக்க சென்று பிணமாக வீடு திரும்பிய புதுமாப்பிள்ளை - திருமணமான மூன்றே நாளில் நிகழ்ந்த சோகம்

x

சென்னையில் சாலை விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். கார் ஓட்டுநரான இவருக்கு கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், மாமியார் வீட்டிற்கு சென்றிருந்த அவர், நண்பர்களை சந்திக்க போவதாக கூறி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

பின்னர், மது போதையில் வீடு திரும்பிய நிலையில், செனாய் நகர் அருகே நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இதையடுத்து, படுகாயங்களுடன் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மணிகண்டன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்