ரயில் மீது கற்களை வீசிய போதை ஆசாமி - கண்ணாடி உடைந்து ஓட்டுனருக்கு காயம் | Chennai | Train

x

சென்னை கொருக்குப்பேட்டையில் சரக்கு ரயில் மீது, கல் வீசித் தாக்கியவரை போலீசார் கைது செய்தனர். கடந்த மாதம் 21-ஆம் தேதி கொருக்குப்பேட்டை வழியாக ரயில் சென்றபோது, தண்டவாளத்தில் 3 பேர் நின்று கொண்டிருந்தக் கண்டு ரயில் ஓட்டுனர் ஒலி எழுப்பினார். அவர்களில் மது போதையில் இருந்த அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பூபாலன் என்பவர், கற்களை கொண்டு ஓட்டுநரை தாக்கியுள்ளார். அதில், ரயில் கண்ணாடி உடைந்து ஓட்டுநரின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. ரயில் ஓட்டுனர் செல்போனில் பதிவு செய்த வீடியோ காட்சிகளை வைத்து, பூபாலனை கொருக்குப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்