வீடு திரும்பிய இளைஞரை திடீரென சுற்றி வளைத்த 4 பேர்... முதியவர் கண்முன் நடந்த பயங்கரம்

x

திருச்செங்கோடு அப்பூர்பாளையத்தைச் சேர்ந்த தேவராஜ் மற்றும் 60 வயது முதியவர் ராஜி ஆகியோர், கைலாச பாளையம் செல்லும் சாலையில், எலக்ட்ரிஷியன் வேலை பார்த்துவிட்டு வீடு திரும்பியுள்ளனர். அப்போது அவர்களை வழிமறித்த மர்மநபர்கள் 4 பேர், தேவராஜை சரமாரியாக தாக்கியதுடன், கத்தியல் கழுத்தை அறுத்துக் கொடூரமாக கொலை செய்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த முதியவர் ராஜ், இந்த சம்பவத்தை தேவராஜின் குடும்பத்தினருக்கு செல்போன் மூலம் தெரிவித்துள்ளார். பின்னர் அங்கு வந்த அவர்கள், தேவராஜ், கொடூரமாக கொலை செய்யப்பட்டுக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக, குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், கொலை செய்துவிட்டு தப்பியோடிய மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்