லிங்கத்தின் மீது விழுந்த சூரிய கதிர்கள்... பொன்னொளியில் மின்னிய சிதம்பரேசுவரர்... | Namakkal

x

நாமக்கல் அருகே அ.மேட்டுப்பட்டியில் சிதம்பரேசுவரர் கோயிலில் மூலவர் சிவனின் மீது சூரிய ஒளி படும் அரிய நிகழ்வு காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது... கரைபோட்டான் ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் வெளிவாசலில் இருந்து சுமார் 40 அடி தொலைவில் இருக்கும் கருவறையில் உள்ள சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளிக்கதிர்கள் விழுவது சிறப்பு வாய்ந்தது... இந்த ஆண்டும், இன்று முதல் 3 நாட்களுக்கு இந்த அரிய நிகழ்வு நடந்தேறும்... இன்று காலை ஆறரை மணிக்குத் துவங்கி தொடர்ந்து 15 நிமிடங்கள் வரை நீடித்த இந்த அபூர்வ நிகழ்வை பக்திப் பரவசத்துடன் பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்