ஆடு மேய்க்கச் சென்ற பெண் சடலமாக மீட்பு - கழுத்தில் ரத்த காயங்கள்.. கொலையா..? - வட மாநில இளைஞர்கள் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு

x
  • நாமக்கல் அருகே ஆடு மேய்க்க சென்ற பெண் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், வட மாநில இளைஞர்கள் கொலை செய்ததாக உறவினர்கள் குற்றஞ்சாட்டி சாலை மறியல் ஈடுபட்டனர்.
  • நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே கரப்பாளையத்தில், ஆடு மேய்க்கச் சென்ற பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.
  • கழுத்தில் ரத்த காயங்கள் இருந்த‌தால், கொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். நகைகள் திருடப்பட்டதோடு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்
  • . இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
  • அருகில் வேலை பார்த்து வரும் வடமாநிலத் தொழிலாளர்கள் கொலை செய்த‌தாக குற்றம் சாட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  • உரிய நடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்த‌தை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்