ஏலச்சீட்டு பணத்தை கொடுக்காத நபர் மீது தந்தை,மகன் சேர்ந்து நடுரோட்டில் தாக்குதல் - வெளியான பரபரப்பு காட்சி

x
  • நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் ஏலச்சீட்டு பணத்தை திருப்பிச் செலுத்தாத நபரை தந்தையும் மகனும் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
  • பள்ளிபாளையம் பெரியார் நகரைச் சேர்ந்த சண்முகராஜ் என்பவர் தனது வீட்டின் அருகே ஏலச்சீட்டு நடத்தி வந்த திமுக நகர்மன்ற உறுப்பினரின் கணவர் சண்முகத்திடம் 3 லட்ச ரூபாய் வாங்கியுள்ளார்.
  • கடந்த 6 மாதமாக ஏலச்சீட்டு தொகையை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்த சண்முகராஜனை சண்முகமும் அவருடைய மகன் தங்கமணியும் சேர்ந்து தாக்கியுள்ளனர்.
  • இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்