அதிமுக ஒற்றை தலைமை விவகாரம்.. நயினார் நாகேந்திரன் "நறுக்" பதில்

x

இந்திய ராணுவம் வலிமை பெறுவதற்காகவே அக்னிபத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பிரதமர் மோடியின் 8 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், அக்னிபத் திட்டம் மக்களுக்கு தேவையான திட்டம் எனவும், இந்திய ராணுவம் வலிமை பெறுவதற்காகவே இத்திட்டம் கொண்டு வரப்பட்டதாகவும் கூறினார். அதிமுக ஒற்றை, இரட்டை தலைமை கருத்து அவர்களின் விருப்பம் என அவர் அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்