5 வது முறையாக முதல்வராக பதவியேற்ற நெய்பியூ ரியோ | Neiphiu Rio

x

கோஹிமாவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா, அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து நாகாலாந்து மாநில முதல்வராக ஐந்தாவது முறையாக நெய்பியூ ரியோ மீண்டும் பதவியேற்றுக் கொண்டார் . ஆளுனர் இல.கணேசன் முதல்வர் நெய்பியூ ரியோவுக்கு பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இவர் தவிர பாஜகவின், யாதுங்கோ பத்தோன் என்டிபிபி கட்சியை சேரந்த ஸெலியாங் ஆகியோர் துணை முதல்வர்களாக பதவி ஏற்றனர்.

முதன்முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட சல்ஹூ டியூனோ குரூஸ் நாகாலாந்து மாநிலத்தின் முதல் பெண் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்