வீட்டில் இருந்த வாகனங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு.. கருகி கிடந்த வாகனங்கள் | Thiruvallur

x

பழவேற்காட்டில், வீட்டில் நிறுத்தி வைத்திருந்த வாகனங்களுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியைச் சேர்ந்தவர் மகிமை ராஜ். நேற்று இரவு, இவரது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன. அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது. இதில், இருசக்கர வாகனம் முழுவதும் எரிந்து தீக்கிரையானது. மேலும், விபத்து நடந்த இடத்தில் கண்ணாடித் துண்டுகள் சிதறி கிடந்ததாகக் கூறப்படும் நிலையில், பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா, அல்லது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்