திரும்பி வந்த மர்ம பார்சல்... பிரித்து பார்த்த கூரியர் ஓனர்...படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி..

x

கர்நாடகாவில் கூரியர் அலுவலகம் ஒன்றில் பார்சல் வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் ஹாசன் பகுதியில் உள்ள ஆர்.கேபுரம் நகரில் சசி என்பவருக்கு சொந்தமான கூரியர் நிறுவனத்திற்கு ஒரு பார்சல் வந்துள்ளது. அதனை இரண்டு நாள்களுக்கு முன்பு ஒரு நபர் வாங்கிச் சென்று, சரியான முகவரிக்கு வரவில்லை என திருப்பி கொடுத்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு 7:30 மணி அளவில் திருப்பிக் கொடுக்கப்பட்ட அந்த பார்சல் வெடித்துச் சிதறியுள்ளது. இந்த சம்பவத்தில் கூரியர் அலுவலகத்தில் இருந்த உரிமையாளர் சசிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தடயவியல் வல்லுநர்கள் குழு ஆதாரங்களை சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் திரும்பி வந்த பார்சலை கூரியர் நிறுவன உரிமையாளர் சசி பிரித்து பார்த்தபோது வெடித்ததாக தெரியவந்துள்ளது. மேலும், அந்த பார்சல் அனுப்பிய நபர் யார், யாருக்கு பார்சல் அனுப்பப்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்