நெஞ்சை உலுக்கிய கொடூர சம்பவம்.! உறங்கி கொண்டிருந்த மனநிலை பாதிக்கப்பட்டவரை கொலை செய்த மர்ம நபர்கள்..

நெஞ்சை உலுக்கிய கொடூர சம்பவம்.! உறங்கி கொண்டிருந்த மனநிலை பாதிக்கப்பட்டவரை கொலை செய்த மர்ம நபர்கள்..
x

மன நிலை பாதிக்கப்பட்ட இளைஞர் கொடூரக் கொலை

பெற்றோரால் கவனிக்கப்பட்டு வந்த நிலையில் கொலை

மன நலம் பாதிக்கப்பட்டவர் என்றும் பாராத கொலையாளிகள்

சொத்து தகராறில் கொலை நடந்ததா என தீவிர விசாரணை

இயங்க முடியாமல் இருந்த நபர் கொல்லப்பட்டதால் அதிர்ச்சி

சிவகங்கையில் மன நலம் பாதிக்கப்பட்ட இளைஞரை மர்ம கும்பல் ஒன்று வீடு புகுந்து கொடூரமாக வெட்டிக்கொன்ற நிகழ்வு அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சிவகங்கை டி.புதூரில் வசித்து வருபவர் ராகவானந்தம், இவர் சில வருடங்களாக மன நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டிலேயே குடும்பத்தினரால் கவனிக்கப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் வழக்கம் போல இரவில் வீட்டில் உள்ள அறையில் உறங்க சென்றுள்ளார். அப்போது புகுந்த மர்ம நபர்கள் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்றும் பாராமல் ராகவானந்தத்தை மிகக் கொடூரமாக கொலை செய்துவிட்டு சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த சிவகங்கை போலீசார் ராகவானந்தத்தின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சொத்து தகராறில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனநலம் மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்டு இயங்க முடியாமல் இருந்த நபரை மர்ம கும்பல் கொலை செய்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்