சுக்கு காபி வியாபாரிகளை கடத்திய மர்ம நபர்கள் - திருப்பூரில் பரபரப்பு

x

திருப்பூர் மாவட்டத்தில் கற்கண்டு வாங்குவதற்கு வாங்கிய பணத்தை திரும்ப தராத ஆத்திரத்தில், சுக்கு காபி விற்ற 2 பேரை மூவர் கடத்தி சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையை சேர்ந்தவர் ரமேஷ். இவர் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த ஐயப்பன் என்பவரிடம் சுமார் ஒரு லட்சத்து 90 ஆயிரத்துக்கு கற்கண்டு மூட்டைகள் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த தொகையினை திரும்பத்தராமல் ரமேஷ் இழுத்தடித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், ரமேஷின் பணியாளர்களான சுக்கு காபி விற்ற இருவரை ஐயப்பனின் தரப்பினர் ஆம்னி வேனில் கடத்தி சென்றதாக ரமேஷ் போலீசில் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் கடத்தப்பட்ட இடத்திற்கு சென்ற போலீசார், ரமேஷின் பணியாளர்கள் இருவரையும் பாதுகாப்பாக மீட்ட நிலையில், ஐயப்பன் உட்பட அவரது கூட்டாளிகள் மூவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்