"தண்ணீல மிதக்குறானே என் பையன்..திருமா வந்துடுயா.." கதறும் தாய்..ஆற்றில் புதைந்து கிடந்த சடலம் -திருவாரூரில் அதிர்ச்சி

x

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் காணாமல் போன இளைஞர் ஆற்றில் புதைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைவாசல் கிராமத்தைச் சேர்ந்த ஆசீர்வாதம் என்பவரது மகன் திருமாவளவன், கும்பகோணம் பகுதியில் அறுவடை இயந்திரம் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 9 ம் தேதி கும்பகோணத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்ற நிலையில், மீண்டும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் இது குறித்து நீடாமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், விசாரணை மேற்கொண்டு திருமாவளவனை தேடி வந்த போலீசார், முல்லைவாசல் மதகடி ஆற்றின் அருகே சடலமாக மீட்டனர். மேலும், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக, சடலத்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்ய சொல்லி உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்