ஆடுகளுடன் வந்த இஸ்லாமியர் "ஜெய் ஸ்ரீ ராம்.. ஜெய் ஸ்ரீ ராம்.." - பரபரப்பு வீடியோ

x

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், பக்ரீத் பண்டிகைக்காக ஆடுகளை லிப்டில் கொண்டு வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் போராட்டம் நடத்தினர். வினை நகர் ஹவுசிங் சொசைட்டி என்னும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மொஹ்சின் ஷேக் என்பவர், ஆடுகளை பலி கொடுப்பதற்காக லிப்டில் ஏற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய குடியிருப்பு வாசிகள், ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக 11 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்