21 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து...3 வது மாடியில் இருந்து குதித்து தப்பிய பெண்

x

மும்பையின் மலாட் என்னும் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து நிகழ்ந்தது.

21 மாடிகள் கொண்ட, அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது தளத்தில் நடந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த குடியிருப்பு வாசிகள், தீயணைப்புத்துறையினருக்கு, தகவல் கொடுத்தனர்.

உடனடியாக அங்கு வந்த தீயணைப்புத்துறையினர்

போராடி தீயை அணைத்தனர். இதற்கிடையே தீ ஏற்பட்ட மூன்றாவது தளத்தில் இருந்து பெண் ஒருவர் கீழே குதித்து தப்பித்துள்ளார்.

லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது


Next Story

மேலும் செய்திகள்