"வந்தா வா வராட்டி போ.. மத்திய அரசுக்கு அக்கறையே இல்லை" கொந்தளித்த எம்பி கனிமொழி

x

ஒரே ஒரு மாணவனுக்காகக் கூட பள்ளியை செயல்பட வைப்பது திராவிட மாடல் என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில், திராவிட கழக தலைவர் கி.வீரமணியின் 90-வது பிறந்தநாள் விழா, ஏடி கோபால் நூற்றாண்டு விழா, விடுதலை நாளிதழின் சந்தா வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, புதிய கல்விக் கொள்கையை கொண்டு வரும் மத்திய அரசுக்கு மாணவர்களின் கல்வி மேல் அக்கறை இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரே ஒரு மாணவனுக்காக கூட பள்ளியை செயல்பட வைப்பது தான் திராவிட மாடல் ஆட்சி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்