"நடிகர் அஜித் பெயரில் வீடு கட்டி தருவதாக கூறி பண மோசடி"-பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியர் அலுவலகத்தில் மனு

x

நெல்லை அருகே நடிகர் அஜித் பெயரில் வீடு கட்டி தருவதாக கூறி பண மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்

மனு அளித்துள்ளார்.

விக்கிரமசிங்கபுரம் கட்டப்புளி பகுதியை சேர்ந்த ஐயப்பன், ராஜேஸ்வரி தம்பதியரிடம் தாளையத்து பகுதியை சேர்ந்த சிவா என்பவர் தான் அஜித் ரசிகர் மன்ற நிர்வாகிக்கு நெருக்கமானவர் என்று அறிமுகமாகியுள்ளார். நடிகர் அஜித் பெயரில் 15 லட்சம் ரூபாய் செலவில் வீடு கட்டி தருவதாக கூறி, அத்தம்பதியரிடம் சிவா ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் முன்பணமாக பெற்று மோசடி செய்து விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிவா மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட ராஜேஸ்வரி, நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். தனது கணவர் ஐயப்பன் நடிகர் அஜித் ரசிகர் என்றும், ஏழ்மையான தங்களை ஏமாற்றி சிவா பணமோசடி செய்து விட்டதாகவும் ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்