அமெரிக்கா புறப்பட்ட மோடி - இந்தியாவிற்கு entry கொடுத்த ராகுல்

x

பிரதமர் நரேந்திர மோடி இன்று அமெரிக்கா புறப்பட்ட நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அமெரிக்காவில் இருந்து இன்று இந்தியா திரும்புகிறார்.

ராகுல் காந்தி கடந்த மே மாதம் 31-ம் தேதி அமெரிக்கா சென்றார். நியூயார்க் மேடிசன் ஸ்கொயர் கார்டனில் சுமார் 5,000 வெளிநாடு வாழ் இந்தியர்களுடன் உரையாற்றினார். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார். வாஷிங்டன் மற்றும் கலிபோர்னியாவிற்கு சென்று அந்நாட்டு அரசியல்வாதிகள் மற்றும் தொழில்முனைவோரையும் ராகுல் காந்தி சந்தித்துப் பேசினார். இந்தியாவில் மக்களை அச்சுறுத்தும் வகையில் பா.ஜ.க அரசு செயல்படுவதாக அமெரிக்காவில் ராகுல் காந்தி பேசியிருந்தார். வாஷிங்டன் டிசி.யில் இருந்து நியூயார்க்கிற்கு டிரக் சவாரி செய்தார். 190 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்த தகவலை யூடியூப் மூலம் பகிர்ந்தார். கிட்டத்தட்ட 20 நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்காவிலிருந்து ராகுல் காந்தி இன்று மாலை இந்தியா திரும்புகிறார்.


Next Story

மேலும் செய்திகள்