"தமிழின் பெருமை அறிந்து முக்கியத்துவம் அளிக்கிறார் மோடி" - நிர்மலா சீதாராமன் பேச்சு

x

தமிழின் பெருமையை அறிந்து, தமிழ் மொழிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் அளித்து வருகிறார் என்று காசி தமிழ்ச் சங்கமம் விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். அந்த விழாவில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய நிர்மலா சீதாராமன், பாரத் தாயின் நாவில் இருக்கும் தமிழ் மொழியின் பெருமையை நன்கு உணர்ந்த பிரதமர் மோடி, அதை கௌரவிக்கும் வகையில் உலக அரங்குகளில் சங்க தமிழ் இலக்கியங்களை மேற்கோள் காட்டிப் பேசி வருகிறார் என்றார். ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற பிரதமரின் முழக்கத்தை நனவாக்குவதே காசி தமிழ் சங்கமத்தின் தலையாய நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்