22 இடங்களில் கழிவு நீர் கலப்பு,சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க - எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

x

22 இடங்களில் கழிவு நீர் கலப்பு, சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க - எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை பக்கிங்காம் கால்வாயில் கழிவு நீர் கலப்பதை தடுத்து, சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பது தொடர்பாக, நடுக்குப்பம் பகுதியில் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பக்கிங்காம் கால்வாயில், 22 இடங்களில் கழிவு நீர் கலப்பது கண்டறியப்பட்டது. இதில், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட நொச்சிக்குப்பம், லாக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கவும், கால்வாயின் கரைகளை அழகுபடுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்து, பசுமைவழிச்சாலை, நடுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்