மண்டியிட்டு கெஞ்சிய ராணுவ வீரர்... "அமைச்சர்கள், ஒரு முக்கிய புள்ளி பேசினாங்க"- வெளியான பகீர் ஆடியோ

x

ஆரணி அருகே படவேடு கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் என்ற ராணுவ வீரரின் மனைவி கீர்த்தி. இவருக்கும், ராமு என்பவருக்கும் இடையே கோயில் இடத்தில் உள்ள கடை சம்பந்தமாக பிரச்சனை இருந்துள்ளது. கடையை காலி செய்ய கீர்த்தி மறுத்த‌தால், ராமு என்பவர் அடியாட்களுடன் சென்று தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், தனது மனைவியை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க‌க்கோரி காஷ்மீரில் இருந்து ராணுவ வீரர் பிரபாகரன் வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினரும் ராணுவ வீரருக்கு ஆதரவாக குரலை எழுப்பினர். அதனைத் தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், இந்த சம்பவத்தில் உரிய விசாரணை நடத்தி, யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். அதன் பிறகு, பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், எதிர் தரப்பைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்ததுடன், தொடர்ந்து இந்த விவகாரத்தில் துரித விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ராணுவ வீரர் பிரபாகரன் மற்றொரு ஆடியோவை வெளியிட்டு, மீண்டும் புயலைக் கிளப்பினார். அதில், படவேடு கிராமத்தை சேர்ந்த திமுக வடக்கு ஓன்றிய செயலாளர் ஆர்.வி.சேகர் என்பவர் அடியாட்களை ஏவி விட்டு தன் மனைவி கீர்த்தியை தாக்கியதாக கூறியிருந்தார்.


Next Story

மேலும் செய்திகள்