போதையில் அமைச்சர் மருமகன் செய்த செயல் - வெளியான CCTV காட்சி

x

ராஜஸ்தான் மாநில அமைச்சர் பிரதாப் சிங் கச்சாரியாவாசின் மருமகன், தமது ஆட்களுடன் ஓட்டலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக புகார்கள் எழுந்த நிலையில் அதுதொடர்பான சிசிடிவி பதிவுகள் வெளியாகியுள்ளன.

ஜெய்பூரில் உள்ள ஓட்டலுக்கு தமது ஆட்களுடன் வந்த ஹர்ஸ்தீப் கச்சாரியாவாஸ், மது அருந்திவிட்டு, ஓட்டலில், வாடிக்கையாளர்கள் தங்கியுள்ள அறைகளை திறந்து காண்பிக்குமாறு ஊழியர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதற்கு ஓட்டல் நிர்வாகம் மறுப்பு தெரிவித்த நிலையில், ஹர்தீப் கச்சாரியாவாஸ் ஓட்டலில் உள்ள பொருட்களை சேதப்படுத்தியதுடன், சிசிடிவி பதிவுகளையும் அழித்ததாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், தாக்குதல் தொடர்பான சிசிடிவி பதிவுகள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்