சேலம் மக்களுக்கு அமைச்சர் நேரு சொன்ன தகவல்

x

சேலம் மாநகராட்சியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் நேரு கூறியுள்ளார். சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்களுக்கு புதிய வாகனம் வழங்கும் நிகழ்ச்சி, ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் நேரு பங்கேற்று, வாகனங்களை வழங்கினார். பின்னர் பேசிய அவர், சேலம் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சென்னை மாநகராட்சி மேயர், பார்வையிட்டு வரும் திட்டங்களை, தமிழ்நாட்டில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

Minister Nehru's message to the people of Salem


Next Story

மேலும் செய்திகள்